Sunday, July 17, 2011

சித்தர்கள் வரலாறு-14

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-1
நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்நாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே - அகப்பேய்நீ ஒன்றுஞ் சொல்லாதே!என்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.
          
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய்நாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே .....அகப்பேய்நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1
பராபர மானதடி .....அகப்பேய்பரவையாய் வந்தடிதராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்தானே படைத்ததடி. 2
நாத வேதமடி .....அகப்பேய்நன்னடம் கண்டாயோபாதஞ் சத்தியடி .....அகப்பேய்பரவிந்து நாதமடி. 3
விந்து நாதமடி .....அகப்பேய்மெய்யாக வந்ததடிஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்அதனிடம் ஆனதடி. 4
நாலு பாதமடி .....அகப்பேய்நன்னெறி கண்டாயே மூல மானதல்லால் .....அகப்பேய்முத்தி அல்லவடி. 5
வாக்காதி ஐந்தடியோ .....அகப்பேய்வந்த வகைகேளாய்ஒக்கம் அதானதடி .....அகப்பேய்உண்மையது அல்லவடி. 6சத்தாதி ஐந்தடியோ .....அகப்பேய்சாத்திரம் ஆனதடிமித்தையும் ஆகமடி .....அகப்பேய்மெய்யது சொன்னேனே. 7வசனாதி ஐந்தடியோ .....அகப்பேய்வண்மையாய் வந்ததடிதெசநாடி பத்தேடி .....அகப்பேய்திடன் இது கண்டாயே. 8காரணம் ஆனதெல்லாம் .....அகப்பேய்கண்டது சொன்னேனேமாரணங் கண்டாயே .....அகப்பேய்வந்த விதங்கள் எல்லாம். 9ஆறு தத்துவமும் .....அகப்பேய்ஆகமஞ் சொன்னதடிமாறாத மண்டலமும் .....அகப்பேய்வந்தது மூன்றடியே. 10பிருதிவி பொன்னிறமே .....அகப்பேய்பேதமை அல்லவடிஉருவது நீரடியோ .....அகப்பேய்உள்ளது வெள்ளையடி. 11தேயு செம்மையடி .....அகப்பேய்திடனது கண்டாயேவாயு நீலமடி .....அகப்பேய்வான்பொருள் சொல்வேனே. 12வான மஞ்சடியோ .....அகப்பேய்வந்தது நீகேளாய்ஊனமது ஆகாதே .....அகப்பேய்உள்ளது சொன்னேனே. 13அகாரம் இத்தனையும் .....அகப்பேய்அங்கென்று எழுந்ததடிஉகாரங் கூடியடி .....அகப்பேய்உருவாகி வந்ததடி. 14மகார மாயையடி .....அகப்பேய்மலமது சொன்னேனேசிகார மூலமடி .....அகப்பேய்சிந்தித்துக் கொள்வாயே. 15வன்னம் புவனமடி .....அகப்பேய்மந்திரம் தந்திரமும்இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்இம்மென்று கேட்பாயே. 16அத்தி வரைவாடி .....அகப்பேய்ஐம்பத்தோர் அட்சரமும்மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்மெய்யென்று நம்பாதே.17தத்துவம் ஆனதடி .....அகப்பேய்சகலமாய் வந்ததடிபுத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்பூத வடிவலவோ. ௧ 8இந்த விதங்களெல்லாம் .....அகப்பேய் எம்இறை அல்லவடிஅந்த விதம்வேறே .....அகப்பேய்ஆராய்ந்து காணாயோ. ௧ 9பாவந் தீரவென்றால் .....அகப்பேய்பாவிக்க லாகாதேசாவதும் இல்லையடி .....அகப்பேய்சற்குரு பாதமடி. 20எத்தனை சொன்னாலும் .....அகப்பேய்என் மனந்தேறாதேசித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்சேர்த்துநீ காண்பாயே. 2௧ சமய மாறுமடி .....அகப்பேய்தம்மாலே வந்தவடிஅமைய நின்றவிடம் .....அகப்பேய்ஆராய்ந்து சொல்வாயே. 22ஆறாறும் ஆகுமடி .....அகப்பேய்ஆகாது சொன்னேனேவேறே உண்டானால் .....அகப்பேய்மெய்யது சொல்வாயே. 23உன்னை அறிந்தக்கால் .....அகப்பேய்ஒன்றையும் சேராயேஉன்னை அறியும்வகை .....அகப்பேய்உள்ளது சொல்வேனே. 24சரியை ஆகாதே .....அகப்பேய்சாலோகங் கண்டாயேகிரியை செய்தாலும் .....அகப்பேய்கிட்டுவது ஒன்றுமில்லை. 25 யோகம் ஆகாதே .....அகப்பேய்உள்ளது கண்டக்கால்தேக ஞானமடி .....அகப்பேய்தேடாது சொன்னேனே. 26ஐந்துதலை நாகமடி .....அகப்பேய்ஆதாயங் கொஞ்சமடிஇந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்எம் இறை கண்டாயே. 27இறைவன் என்றதெல்லாம் .....அகப்பேய்எந்த விதமாகும்அறைய நீகேளாய் .....அகப்பேய்ஆனந்த மானதடி. 28கண்டு கொண்டேனே .....அகப்பேய்காதல் விண்டேனேஉண்டு கொண்டேனே .....அகப்பேய்உள்ளது சொன்னாயே. 29உள்ளது சொன்னாலும் .....அகப்பேய்உன்னாலே காண்பாயேகள்ளமுந் தீராதே .....அகப்பேய்கண்டார்க்குக் காமமடி. 30அறிந்து நின்றாலும் .....அகப்பேய்அஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் .....அகப்பேய்போகாதே உன்னை விட்டு. 31ஈசன் பாசமடி .....அகப்பேய்இவ்வண்ணங் கண்டதெல்லாம்பாசம் பயின்றதடி .....அகப்பேய்பரமது கண்டாயே. 32சாத்திரமும் சூத்திரமும் .....அகப்பேய்சங்கற்பம் ஆனதெல்லாம்பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்பாழ் பலங்கண்டாயே. 33ஆறு கண்டாயோ .....அகப்பேய்அந்த வினை தீரதேறித் தெளிவதற்கே .....அகப்பேய்தீர்த்தமும் ஆடாயே. 34எத்தனை காலமுந்தான் .....அகப்பேய்யோகம் இருந்தாலென் ?முத்தனு மாவாயோ .....அகப்பேய்மோட்சமும் உண்டாமோ ? 35நாச மாவதற்கே .....அகப்பேய்நாடாதே சொன்னேனேபாசம் போனாலும் .....அகப்பேய்பசுக்களும் போகாவே. 36நாணம் ஏதுக்கடி .....அகப்பேய்நல்வினை தீர்ந்தக்கால்காண வேணுமென்றால் .....அகப்பேய்காணக் கிடையாதே. 37சும்மா இருந்துவிடாய் .....அகப்பேய்சூத்திரஞ் சொன்னேனேசும்மா இருந்தவிடம் .....அகப்பேய்சுட்டது கண்டாயே. 38உன்றனைக் காணாதே .....அகப்பேய்ஊனுள் நுழைந்தாயேஎன்றனைக் காணாதே .....அகப்பேய்இடத்தில் வந்தாயே. 39வானம் ஓடிவரில் .....அகப்பேய்வந்தும் பிறப்பாயேதேனை உண்ணாமல் .....அகப்பேய்தெருவொடு அலைந்தாயே. 40சைவ மானதடி .....அகப்பேய்தானாய் நின்றதடிசைவம் இல்லையாகில் .....அகப்பேய்சலம்வருங் கண்டாயே 41ஆசை அற்றவிடம் .....அகப்பேய்ஆசாரங் கண்டாயேஈசன் பாசமடி .....அகப்பேய்எங்ஙனஞ் சென்றாலும். 42ஆணவ மூலமடி .....அகப்பேய்அகாரமாய் வந்ததடிகோணும் உகாரமடி .....அகப்பேய்கூடப் பிறந்ததுவே. 43ஒன்றும் இல்லையடி .....அகப்பேய்உள்ளபடி யாச்சேநன்றிலை தீதிலையே .....அகப்பேய்நாணமும் இல்லையடி. 44சும்மா இருந்தவிடம் .....அகப்பேய்சுட்டது சொன்னேனேஎம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்என்னையுங் காணேனே. 45கலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்கண்டார் நகையாரோ?நிலைகள் ஏதுக்கடி .....அகப்பேய்நீயார் சொல்வாயே. 46இந்து அமிழ்தமடி .....அகப்பேய்இரவி விடமோடிஇந்து வெள்ளையடி .....அகப்பேய்இரவி சிவப்பாமே. 47ஆணல பெண்ணலவே .....அகப்பேய்அக்கினி கண்டாயேதாணுவும் இப்படியே .....அகப்பேய்சற்குரு கண்டாயே. 48என்ன படித்தாலும் .....அகப்பேய்எம்முரை யாகாதே சொன்னது கேட்டாயே .....அகப்பேய்சும்மா இருந்துவிடு. 49காடும் மலையுமடி .....அகப்பேய்கடுந்தவம் ஆனால்என்வீடும் வெளியாமோ .....அகப்பேய்மெய்யாக வேண்டாவோ. 50 பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்பாரிலே மீளுமடிபரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்பாழது கண்டாயே. 51பஞ்ச முகமேது .....அகப்பேய்பஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி .....அகப்பேய்குருபா தங்கண்டாயே. 52பங்கம் இல்லையடி .....அகப்பேய்பாதம் இருந்தவிடம்கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்கண்டு தெளிவாயே. 53தானற நின்றவிடம் .....அகப்பேய்சைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்ஊனமொன்று இல்லையடி. 54சைவம் ஆருக்கடி .....அகப்பேய்தன்னை அறிந்தவர்க்கே சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!சற்குரு பாதமடி. 55பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!பேதகம் பண்ணாதேதுறவி யானவர்கள் .....அகப்பேய்!சும்மா இருப்பார்கள். 56ஆரலைந் தாலும் .....அகப்பேய்!நீயலை யாதேடிஊர லைந்தாலும் .....அகப்பேய்!ஒன்றையும் நாடாதே. 57தேனாறு பாயுமடி .....அகப்பேய்!திருவடி கண்டவர்க்கேஊனாறு மில்லையடி .....அகப்பேய்!ஒன்றையும் நாடாதே. 58வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!வெள்ளியுஞ் செம்பாமோஉள்ளது உண்டோ டி .....அகப்பேய்!உன் ஆணை கண்டாயே. 59அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!ஆதாரம் இல்லையடிஅறிவு பாசமடி .....அகப்பேய்!அருளது கண்டாயே. 60வாசியிலே றியதடி .....அகப்பேய்!வான் பொருள் தேடாயோவாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!வாராது சொன்னேனே. 61தூராதி தூரமடி .....அகப்பேய்!தூரமும் இல்லையடிபாராமற் பாரடியோ .....அகப்பேய்!பாழ்வினைத் தீரவென்றால். 62உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!உள்ளது சொன்னேனேகண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!கற்வனை அற்றதடி. 63நாலு மறைகாணா .....அகப்பேய்!நாதனை யார் காண்பார்நாலு மறை முடிவில் .....அகப்பேய்!நற்குரு பாதமடி. 64மூலம் இல்லையடி .....அகப்பேய்!முப்பொருள் இல்லையடிமூலம் உண்டானால் .....அகப்பேய்!முத்தியும் உண்டாமே. 65இந்திர சாலமடி .....அகப்பேய்!எண்பத்தொரு பதமும்மந்திரம் அப்படியே .....அகப்பேய்!வாயைத் திறவாதே. 66பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!பார்த்ததை நம்பாதேகேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!கேள்வியும் இல்லையடி. 67சாதி பேதமில்லை .....அகப்பேய்!தானாகி நின்றவர்க்கேஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!ஒன்றுந்தான் இல்லையடி. 68சூழ வானமடி .....அகப்பேய்!சுற்றி மரக்காவில்வேழம் உண்டகனி .....அகப்பேய்!மெய்யது கண்டாயே. 69தானும் இல்லையடி .....அகப்பேய்!நாதனும் இல்லையடிதானும் இல்லையடி .....அகப்பேய்!சற்குரு இல்லையடி. 70மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!வாதனை இல்லையடிதந்திரம் இல்லையடி .....அகப்பேய்!சமயம் அழிந்ததடி. 71பூசை பசாசமடி .....அகப்பேய்!போதமே கோட்டமடிஈசன் மாயையடி .....அகப்பேய்!எல்லாமும் இப்படியே. 72சொல்ல லாகாதே .....அகப்பேய்!சொன்னாலும் தோடமடிஇல்லை இல்லையடி .....அகப்பேய்!ஏகாந்தங் கண்டாயே. 73தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!சதாசிவ மானதடிமற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!மாயை வடிவாமே. 74வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!வாசா மகோசரத்தேஏற்ற தல்லவடி .....அகப்பேய்!என்னுடன் வந்ததல்ல. 75 சாத்திரம் இல்லையடி .....அகப்பேய்! சலனங் கடந்ததடிபார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்!பாவனைக் கெட்டாதே. 76என்ன படித்தால்என் .....அகப்பேய்!ஏதுதான் செய்தால்என்சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்!சுட்டது கண்டாயே. 77தன்னை அறியவேணும் .....அகப்பேய்!சாராமற் சாரவேணும்பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்!பேயறி வாகுமடி. 78பிச்சை எடுத்தாலும் .....அகப்பேய்!பிறவி தொலையாதே இச்சை அற்றவிடம் .....அகப்பேய்!எம்இறை கண்டாயே. 79கோலம் ஆகாதே .....அகப்பேய்!குதர்க்கம் ஆகாதேசாலம் ஆகாதே .....அகப்பேய்!சஞ்சலம் ஆகாதே. 80ஒப்பனை அல்லவடி .....அகப்பேய்!உன்ஆணை சொன்னேனே அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்!ஆராய்ந்து இருப்பாயே. 81மோட்சம் வேண்டார்கள் .....அகப்பேய்!முத்தியும் வேண்டார்கள்தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்!சின்மய மானவர்கள். 82பாலன் பிசாசமடி .....அகப்பேய்!பார்த்தக்கால் பித்தனடிகால மூன்றுமல்ல .....அகப்பேய்!காரியம் அல்லவடி. 83கண்டதும் இல்லையடி .....அகப்பேய்!கண்டவர் உண்டானால்உண்டது வேண்டடியோ .....அகப்பேய்!உன்ஆணை சொன்னேனே 84அஞ்சயும் உண்ணாதே .....அகப்பேய்!ஆசையும் வேண்டாதேநெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்!நிட்டையில் சேராதே. 85நாதாந்த உண்மையிலே .....அகப்பேய்!நாடாதே சொன்னேனேமீதான சூதானம் .....அகப்பேய்!மெய்யென்று நம்பாதே. 86ஒன்றோடு ஒன்றுகூடில் .....அகப்பேய்!ஒன்றுங் கெடுங்காணேநின்ற பரசிவமும் .....அகப்பேய்!நில்லாது கண்டாயே. 87தோன்றும் வினைகளெல்லாம் .....அகப்பேய்!சூனியங் கண்டாயேதோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்!சுத்த வெளிதனிலே. 88பொய்யென்று சொல்லாதே .....அகப்பேய்!போக்கு வரத்துதானேமெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்!வீடு பெறலாமே. 89வேதம் ஓதாதே .....அகப்பேய்!மெய்கண்டோ ம் என்னாதேபாதம் நம்பாதே .....அகப்பேய்!பாவித்துப் பாராதே. 90
இதற்கான அர்த்தங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
2. பரவை - கடல் 3. நடம் - கூத்து 4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்7. மித்தை - பொய் 11. பிருதிவி - மண் 12. தேயு - தீ17. அத்தி - யானை, நாடி 25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;கிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்28. அறைய - கூற 34. ஆறு - வழி52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்69. மரக்கா - மரச்சோலை;வேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்72. பசாசம் - பிசாசு 74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது80. கோலம் - அலங்காரம்82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை85. நிட்டை - சிவயோகம் 86. சூதானம் - சாக்கிரதை.

சிவவாக்கியர்.

சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர். அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம். சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார். "கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே." பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது? உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே? கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே? ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ? உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம் உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா? "அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும்போதே சிவ சிவஎன்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் சிவவாக்கியர்என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர்சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வாஎன்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது. சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்என்றார். அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இருஎன்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்என்று கட்டளையிட்டார். சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார். ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார். குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்என்றார். சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்என்றனர் குறவர்கள். சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார். ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார். குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர். உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர். வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்என்று மகிழ்ந்து உணவு உண்டனர். உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார். சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர். இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார். சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது. ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்என்றனர். அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழிஎன்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள். சிவவாக்கியர் தியானத்தில் ஆழ்ந்தார். இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீதான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களை பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் சிவவாகியம்என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது. இவர் ஒரு சமரச் ஞானி. இவர் பாடலில் இராமஜெபமும் உண்டு. சிவவாக்கியர் முதலில் நாத்திகராக இருந்தார். பிறகு சைவராக மாறி சிவவாக்கியர் ஆனார். அதன்பிறகு வீரவைணவரானார். இவர் நாடிப் பரீட்சை என்னும் நூலை எழுதினார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்கு சமாதி பூசை நடைபெற்று வருகிறது. தியானச் செய்யுள் சிவனில் சிந்தை வைத்து ஜீவனில் சித்து வைத்து அவனியைக் காக்க வந்தா அழகர் பெருமானேஅபாயம் நீக்கி சிவாயம் காட்டும் தங்கள் தங்கத் தாமரைத் திருவடிகள் காப்பு. சிவவாக்கியர் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, உதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள், குங்கும திலமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருக பாடி சங்கு புஷ்பம், அல்லது தும்பைப் புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள் 1. பாவங்களைப் போக்குபவரே போற்றி! 2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி! 3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி! 4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி! 5. ருத்ரனின் அவதாரமே போற்றி! 6. தீமைகளை அழிப்பவரே போற்றி! 7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி! 8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி! 10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி! 11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி! 12. கலைகளுக்கு அதிபதியே போற்றி! 13. காருண்ய மூர்த்தியே போற்றி! 14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி! 15. மங்களங்கள் தருபவரே போற்றி! 16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! என்று 108 முறை ஜபிக்கவேண்டும். பின்பு நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். சிவவாக்கியரின் பூசா காரிய சித்திகள் இவர் சந்திர கிரகத்தினை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இவரை பூசிக்க வேண்டும். மேலும் இவரை வழிபட்டால்.. 1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை மாறும். 3. சஞ்சல புத்தி நீங்கும். 4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கும். 5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கட்கிழமையன்று பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
"நட்ட கல்லை தெய்வம் என்று
  நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முனுமுனுவென்று  சொல்லும் மந்திரம் ஏதடா?" - சிவவாக்கியார் - சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர். பிறக்கும் போதே "சிவ" "சிவ" என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப் படுகிறது. போகர் தனது சப்தா காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

 உரோம ரிஷி .

உரோம ரிஷி  சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி. இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார். அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.  அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.  அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார். உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம். உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் அவரோ தன்னைப்பற்றி... "கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம் நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே " பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் . ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் பதம் : பாதம் இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து... இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன. இதோ ஒரு பாடல்... தியானத்தைப் பற்றி... செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா! சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்; வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு; மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு; சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு; பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. போலிகளைப் பற்றி.... மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து வீடேதிங் குடலேது யோக மேது வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்? காடேறி மலையேறி நதிக ளாடிக் காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. தவநிலையைப் பற்றி...  சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால் சுடர்போலக் காணுமடா தூல தேகம்; அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான் பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின் பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால் வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது. "காடேரி மலையேறி நதிகளாடி காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே " சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது. இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம், வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !! உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்பமுறை இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும்  ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் . அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் . அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் . அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் . அதை சுண்ணம் செய்து   பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் . மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் , கருங்கொடி வேலி என்ற ஒரு செடி  இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் . அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,, வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .
தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். "கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம் நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே " - உரோம ரிஷி - இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார். போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார். இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. "உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன. வகார சூதிரம் உரோம ரிஷி வைத்தியம் 1000 உரோம ரிஷி பூஜா விதி உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. உரோமமுனி இயற்றிய நூல்கள் 1. உரோமமுனி வைத்தியம் - 1000 2. உரோமமுனி சூத்திரம் - 1000 3. உரோமமுனி ஞானம் - 50 4. உரோமமுனி பெருநூல் - 500 5. உரோமமுனி குறுநூல் - 50 6. உரோமமுனி காவியம் - 500 7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30 8. உரோமமுனி இரண்டடி - 500 9. உரோமமுனி சோதிட விளக்கம் 10. நாகாரூடம் 11. பகார சூத்திரம் 12. சிங்கி வைப்பு 13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன. உரோமமுனி தியான செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம். உரோமசித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பதினாறு போற்றிகள் 1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி! 2. ஜடாமுடிப் பிரியரே போற்றி! 3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி! 4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி! 5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி! 6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி! 7. சங்கீதப் பிரியரே போற்றி! 8. தடைகளை நீக்குபவரே போற்றி! 9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி! 11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி! 12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி! 13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி! 14. காலத்தைக் கடந்தவரே போற்றி! 15. தெய்வீகச் சித்தரே போற்றி! 16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றிஎன்று 108 முறை ஜபிக்க வேண்டும். பூசைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். உரோமரிஷி சித்தரின் பூஜா பலன்கள் இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் இச்சித்தரின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்… 1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். 2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கிடும். 3. சஞ்சல புத்தி நீங்கும். 4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை மாறிடும். 5. தாயார், மகன், மகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். திங்கள் கிழமை இவருக்கு உகந்த நாள்.

குதம்பைச் சித்தர்.

                                  குதம்பைச் சித்தர்குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து
குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்என்றார்.
ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.
ஸ்ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. சிவனை பூசிப்பவரே போற்றி!
2. ஹடயோகப் பிரியரே போற்றி!
3. சூலாயுதம் உடையவரே போற்றி!
4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
6. ஜோதி சொரூபரே போற்றி!
7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
9. நாட்டியப்பிரியரே போற்றி!
10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி!
 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். தியானச் செய்யுள் சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே! குதம்பை சித்தர் பூஜா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்..
1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும்.
4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும்.
6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.
                                 அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார். குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான். குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். அவரது திருவுருவத்தை மயூரநாதர் கோயிலில் தரிசிக்கலாம். மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!
குதம்பைச் சித்தர் பாடல் குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார். குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும். 32 பாடல்களை கொண்ட இவரது அனைத்து பாடல்களும் பாட எளியவை.
  வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ? 1 கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு? இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை.. மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி ? 2 இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு? காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை ஏதுக்கடி - குதம்பாய் வீணாசை ஏதுக்கடி ? 3 காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன? வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி ? 4 வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்! ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி ? 5 அனைத்திற்க்கும் ஆதாராமான, எவருகும் எட்டாத அச்சிவனின் அடியையும் முடியையும் கண்டவர் சப்தநாடிகளும் ஒடுங்கி நிற்பர், எவ்விதமான வாத பிரதி வாதங்களும் அங்கு இடம் காணாது. நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை ஏதுக்கடி - குதம்பாய் முத்திரை ஏதுக்கடி ? 6 எப்போதும் ஊன் உரக்கமில்லாமல் சிவநினைவோடு இருப்போர்க்கு அச்சாரம் தேவை இருக்காது. தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி ? 7 பூதநாதனின் தந்திரங்கள் நிறைந்த சன்னிதியில் இருப்போர்க்கு, அவன் நாம நினைவை தவிர மந்திரங்கள் கூட தேவை இருக்காது. சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தியம் ஏதுக்கடி ? 8 உண்மையான தவத்தில் இருப்போற்க்கு, உயர்வு என்ற போதைக்கு அடிமை ஆவதில்லை. நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி ? 9 ஆவுடை நாதனின் நடுவில் இருக்கும் லிங்க சொருபத்தில் நாட்டம் கொண்டோர்க்கு துக்கம், சோர்வு, போன்ற எதிர்மரை விளைவுகள் வருவதில்லை. முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச் சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி ? 10 மெய்ஞானிகள் தாம் பேசுவதையே இறைவன் கேட்க வேண்டும் என்று எண்ணுபவரல்லர் ஆகவே அவர்களுக்கு பேச்சு என்னும் சத்தங்களின் தேவை இருக்காது. உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய் இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11 வாயுவை உயர்த்தி தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்டகோடியை கண்டவர்களுக்கு இவுலகின்பகளின் தேவைஇருக்காது. வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய் மோகாந்தம் ஏதுக்கடி ? 12 துக்கமே வாழ்க்கையை நெறிபடுத்தும், அந்த துக்கதிலும், பிற இன்பத்திலும் வெளியொளியான அடியை கண்டோர்க்கு மோகம் நிறைந்த, சிற்றின்ப ஏகாந்த நினைவின் தேவைஇருக்காது சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி ? 13 இறப்பை போக்கும் சிவ வழியைவிட்டு, தம் தனிவழி சென்றோர்க்கு இனியதிலும் இனியதான பேரானந்த ஏகாந்தமிருக்காது. அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத் தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி ? 14 வேற்றுமை அந்தரங்கத்தில் உழழும் மூடர்கள், சிவதந்திர நினைவில் வரமாட்டர். ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி ? 15 ஆனந்த தாண்டவ நாதனை எப்போதும் நினைவில் கொன்டோர்க்கு உலகஞானமெதற்க்கு? சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப் பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய் பத்திரம் ஏதுக்கடி ? 16 நாதன் தாள் கூடத்தை அனுதினம் துதிப்போற்க்கு, பத்திர பட்டயமெதற்க்கு. முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி ? 17 அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு நட்டணை ஏதுக்கடி - குதம்பாய் நட்டணை ஏதுக்கடி ? 18 முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப் பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய் பத்தியம் ஏதுக்கடி ? 19 அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப் பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய் பல்லாக்கு ஏதுக்கடி ? 20 அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி ? 21 வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி ? 22 மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப் பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய் பூத்தானம் ஏதுக்கடி ? 23 செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி ? 24 கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக் கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25 காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி ? 26 வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி ? 27 மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28 பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி ? 29 தாவரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ? 30 தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி ? 31 பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி ? 32
    பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்குபவர் குதம்பைச் சித்தர். இவர் தம் பாடல்களில் காதில் அணியும் அணிகலன்களுள் ஒன்றான குதம்பையை முன்னிலைப் படுத்தி, ‘குதம்பாய்என்று பாடியதால்தான் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். குதம்பைச் சித்தரின் 246 கண்ணிகளும், 246 முத்துக்களும் மாணிக்கங்களாகும். ஓர் எழுத்துக்கு ஒரு கோடி என்று கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாத ரத்தினங்கள் என்று சமய உலகம் போற்றிப் பாராட்டுகிறது. இவர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாகக் கூறுவர். சித்தர் ஞானக் கோவையில் உள்ள 32 பாடல்கள் தவிர, யோக ஞான சாத்திரத் திரட்டில் இவரது பாடல்கள் காணப்படுகின்றன. இவரது பாடல்கள் புரட்சிகரமானவை. சாதி, சமயம், இனம், மதம் இவற்றைச் சாடி, மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்தன என்பதனைக் கீழ்வரும் பாடல் வரி உணர்த்துவதனைக் காணலாம்.     சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்று      ஓதி யுணர்ந்தறிவாய் - குதம்பாய்      ஓதி உணர்ந்தறிவாய். (145)     உலகப் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து அழியாத மெய்ப் பொருளை உணர்ந்த ஞானிகள் புறச் சடங்குகளில் ஈடுபட மாட்டார்கள். யோக நெறி, பக்தி நெறி, புறப் பூசை ஆகிய அனைத்தையும் கடந்த மலோன நிலையை அடைந்த அவர், கீழ்ப்பட்ட நிலைகள் தேவையில்லை எனப் பாடுகின்றார்.     நித்திரை கெட்டு நினைவோடு இருப்பார்க்கு       முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்       முத்திரை ஏதுக்கடி.     உள்ளத் துறவே துறவு ; புறத்துறவு துறவன்று என்பது இவர் கொள்கையாகும். * * *ஆழ்ந்த பொருள் கொண்டதும், மிக எளிமையானதுமான பாடல். * *சிந்தனைக்கு சவால் விடும் பாடல்.* *இப்பாடலைப் பாடி பாமர மக்களிடமும் நன்மதிப்பு * *பெற்றவர்தான் குதம்பைச் சித்தர்.* * * *   இப்பாடல் பல்வேறு அறிஞர்களையும் திகைக்க வைத்தது.* *அனுபவத்தாலன்றி இதன் பொருள் புலப்படாது. சித்தர் பாடல்கள் * *அனைத்தும், அனுபவத்தில் முகிழ்ந்தவையே ஆகும். எனவேதான்,* *சித்தர்களின் பாடல்கள்களுக்குப் பொருள் எழுதுவது மிகவும் * *சிரமமான, கடின செயலாகும். குதம்பைச் சித்தர் அரிய கருத்துக்களை * *கொண்ட பாடல்கள் பல புனைந்துள்ளார்.* * * *   குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் ஒரு வகை அணிகலன். * *அவ்வணிகலன் அணிந்த பெண்ணை முன்னிறுத்திப் பாடியதால் இவர் குதம்பைச் * *சித்தர் என அழைக்கப்பட்டார். வேறு சிலர் இச்சித்தர் தமது மனதையே குதம்பையாக * *உருவகித்துப் பாடியதால் இவர் குதம்பையாகச் சித்தர் என அழைக்கப்பட்டதாகவும் * *கூறுவர். ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி அவளுக்கு அறிவுரை கூறும் விதத்தில் * *பாடல் புனைவது தமிழ் இலக்கியத்தில் மகடூஉ முன்னிலைஎனப்படும். * *குதம்பைச் சித்தரின் பாடல்கள் தமது அமைப்பாலும், எளிமையான தம்மையாலும் * *சாகாவரம் பெற்றவை.* * * *                                   * *   கண்ணிகள் :-- இரண்டு மலர்களை எடுத்து மாலைத் தொடுத்தல் போல், இரண்டு அடிகளால் * *பாடப்படும். இலக்கிய வகை கண்ணிஇவ்விலக்கிய வகை சொல்லப்படும் கருத்தை மிக* *எளிதாக மக்கள் நெஞ்சில் பதிக்கப் பயன்படுகிறது. தாயுமானவர் இயற்றிய பராபரக்கண்ணி’* *பயன்படுகிறது. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் இயற்றிய நிராமயக்கண்ணி இலக்கிய* *வகை நூல்களாகும். இவ்வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களும் அடங்கும். குதம்பைச்* *சித்தரின் பாடல்களை குதம்பைக்கண்ணிஎனப் புதிப்பெயரிட்டு அழைக்கலாம்.**  நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லா கோபாலன் தம்பதிகளுக்கு, யாதவ கிருஷ்ணனை * *வேண்டி நின்றனர். அந்த வேண்டுதலின் அருள்பாலிப்பாக ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் * *கோபாலின் மனைவி ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். * *ஆடி மாதம் விசாகத்தில்பிறந்ததால் இவன் ஒரு சிறந்த* *ஆன்மீகவாதியாக புகழ் பெறுவான்என சோதிடர் குறித்தனர்.* * * *வாராது வந்த மாமழைப்போல் குழந்தை பிறந்ததால் அவனுக்கு விதவிதமான அலங்காரம்,* *ஆடைகள், அணிமணிகளை பூட்டி மகிழ்ந்தனர். காதில் கம்பல் { குதம்பை } பூட்டினர், * *பெண் பிள்ளைப் போல் அலங்கரித்தனர். * *காதில் குதம்பை பளிச்யென மின்னுவதைக்கொண்டு… ’ வா…. குதம்பாய் …, * * என அழைத்தனர். அப்பெயரே இறுதிவரை குதம்பையாக நிலைத்துவிட்டது.* * * *சிறு வயது முதலே இறைவனிடம் மாற அன்பு பூண்ட குதம்பை காலை, மாலை தவறாது * *ஆலயம் சென்று ஆண்டனுக்கு நடக்கும் பூசனைகளை, ஆகம் விதிகளை உன்னிப்பாக * *கவனித்தான். இல்லம் திரும்பிய பின்னும் ஆலய நினைவுகளை மனதில் நிறுத்தி * *இன்புற்று மகிழ்வான். தினம் இந்நிகழ்வுகள் நடைபெற்று வரும்.* * * *குல வழக்கப்படி மாடுகளை மேய்ப்பார். * *கிராமத்து வழியாக தலயாத்திரைச் செல்லும் முனிவர்கள், ரிஷிகளுக்கு தம் * *இல்லத்தில் தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்து, வணங்கி வழி * *அனுப்பி வைப்பார். ஏழைகளுக்கு, துன்பமுற்றோர்களுக்கும் உதவுவார்.* * * *ஒருநாள் பொழுது ஒரு சித்த யோகி குதம்பை அழைத்து வாசியோத்தினையும், * *ஊதுகின்ற மூச்சினை அறிந்த சித்தன் , வாசியின் நுட்பங்களை, காயத்திரி * *மந்திரத்தையும், உடலை பொன்னாக மாற்ற மாற்றக்கூடிய விந்தையை * *விளக்கி ஆசீர்வதித்தார்,* * * *உள்ளம் தழுதழுத்து, உடல் சிலிர்த்து. * *ஐயனே, எளியேன் எம்மையும் பொருட்டாக எண்ணி அருளாசி வழங்கியதற்கு ஏது செவ்வேன் “ * *என நிற்க, * *  காரணம் காரியமின்றி எதுவும் இவ்வுலகில் நடப்பதில்லை.* *   உனது கடந்த வினைப்பயன், பிறவிப் பயன் இப்போது தொடர்கிறது. * *   போன பிறவின் போது  உத்தமனாக சிவ சிந்தனையுடன் கடும் தவம் புரிந்தாய். * *  ஆனால், தவம் முடிவடையும் முன்பே உனது ஆயுள் முடிந்துவிட்டது. * *  இந்த பிறவியில் உன்னிடம் எம்மை கொண்டுசேர்த்திருக்கிறது. * *  இனி நீ பெற்ற ஞானம், அறிவு மக்களுக்கு பயனாக அமையட்டும். * * அதுவே உன் பணியாக தொடரட்டும்’ * *        - என்று வாழ்த்துச் சென்றார்.* * * *சித்த யோகி சொன்னதை வேத வாக்கியமாகக் கொண்டு மக்களுக்கு உபதேசித்தார். * *தமது ஆற்றலை ஆன்மீகத்தை, மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டினார். * *உயிர்பலி கொடுப்பதையும், மக்களின் அறியாமை, மூடப்பழக்க வழக்கங்களை * *கண்டு மனம் வாடி, அதனை சாடி தனது பாடல்மூலம் அறிவுறுத்தினார்.* *சாதி,மத வேற்றுமைகளை, பிரிவினை,உயர்வு தாழ்வுகளை கடுமையாக * *விமர்சித்தார்.* * * *   இறுதியில் மாயூரத்தில் சமாதி நிலைப் பெற்றார்.*

அழுகுணிச் சித்தர்.

                அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.  இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில்  வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம்  தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு  என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று  அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர்  இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே  அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ  இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ  உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்....
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
 உன்பாதஞ் சேரேனோ..
நண்பா!.. பிறப்பும் அதனால் வரும் இறப்பும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மா தன் உண்மை இயல்பை அறியும்போது மரண பயம் அற்றுப்போகும். இதனைத்தான் ஆன்ம விடுதலையென வேதங்கள் கூறுகின்றன. ஆன்மாவான நான் அழிவில்லாதவன். ஐம்பூத சேர்க்கையாலான உன் பருவுடல் மட்டுமே அழிகிறது. உன் வினைப்பயனுக்கேற்ப நான் வேறோர் உடலைத் தேடவேண்டியிருக்கிறது. நின் ஆசைகளும், அவற்றின் விளைவுகளான வினைகளும் அற்றுவிடுமாயின் உடல் விட்டு உடல் என்று நான் ஓடத்தேவையில்லை
அழுகுணிச் சித்தரின் பாடல்
புல்லர் இடத்திப்போய்ப் பொருள் தனக்குக் கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருள்: நல்வழியைக் கைவிட்டுத் தீ நெறியிலே நடப்போர் துறவு வேடம் பூண்டிருந்தாலும் உணவுக்கும் உடைக்கும் திண்டாடுவார்கள். மானந்துறந்து, பொருள் வேண்டி கையேந்தி பல்லைக்காட்டி பரக்கப் பரக்க விழிப்பார்கள். இந்நிலையை அழுகணிச் சித்தர் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். நான் இந்நிலையில் இருக்கின்றேன். என்னுடைய இந்நிலையை போக்க வேண்டும். எனக்கு அருள்வாயாக. பொருளைத் தரவேண்டும் என்று சத்தியை வேண்டுகிறார்.
அழுகுணி சித்தர் பீடம்: ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமென்றால் குழந்தைகள், அழுது அடம்பிடித்து பெற்றோரிடம் எளிதாகப் பெற்றுவிடுவர். இதைப்போலவே தனக்கு முக்தி கிடைக்க எண்ணிய சித்தர் ஒருவர், உலகத்தின் அன்னையான அம்பிகை நீலாயதாட்சியிடம் அழுது பெற்றுள்ளார். இதனால் இவர், "அழுகுணி சித்தர்' என்றே பெயர் பெற்றார். கோரக்கரின் சீடரான அழுகுணி சித்தர், இத்தல அம்பிகை மீது அதீத பக்தி கொண்டு, இங்கேயே தங்கி தினமும் அம்பிகையை வழிபட்டார். அம்பிகையிடம் முக்தி வேண்டி, சிறுவன் போல கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பிரார்த்தனை செய்தார். அம்பிகையும் அவருக்கு அருள்புரிய சிவனிடம் வேண்டவே, அவர் சித்தருக்கு முக்தி கொடுத்தருளினார். இவரது ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது.
 "வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!"
 
- அழுகணிச் சித்தர் -
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை. பொதுவாக இவர் தனது பாடல்களில் "உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை" என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். இவர்,
அழுகணி சித்தர் பாடல் 200
 ஞான சூத்திரம் 24
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம் ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.
நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
    தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும். அவரை அங்கே பார்த்தேன், இவ்விடத்தில் பார்த்தேன் என்பார்கள். ஆனால் எங்கும் தங்க மாட்டார். முடிவில்லாத வழிப்பயணத்தில் போய்க் கொண்டே இருப்பார். யார் எது கேட்டாலும், பதில் கூறவும் மாட்டார். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்கும். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று வழங்கினர். காலப்போக்கில் அழுகண்ணர் என்றும் அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கினர் என்பதும் தெரிய வருகிறது.     இச்சித்தர் ஊரைப் பார்த்து அழுதார். உலகைப் பார்த்து அழுதார், தன்னையே பார்த்தும் அழுதார்.      பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து
       மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்      
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
      
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.
              
- பாழாய் முடியாதோ. என்று பாடுகின்றார்.
     
இப்பாடலில்கண்ணம்மாஎன விளித்துப் பாடுவது இறைவனை. பிற்காலத்தில் வந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு இதன் அடிப்படையில் தோன்றுகின்றது.
    
 வேதாந்தக் கருத்துகள்,
 வைத்தியம்,
யோகம்,
ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளார்.
அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் அவருடைய படைப்புகளாகும்.
    நாகப்பட்டினத்தில் உள்ள     சிவபெருமான் கோயில் வளாகத்திலேயே அழுகண் சித்தர் சமாதியும் உள்ளது.

கடுவெளிச் சித்தர்.

                                   கடுவெளிச் சித்தர்
"வைதோரைக் கூட வையாதே- இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே- உந்தன்
வீராப்பு தன்னை விளங்க நாட்டாதே
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்"
-ஆசான் கடுவெளிச்சித்தர்-

"பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்"
                               மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார். யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள், மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள், உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கல், நூறு பேரின் நடுவே தன்னை போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள். இந்த செயல்களை தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார். மதுரை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி. சாதாரண, மனிதரைப் போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார். அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம் பேசி, அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார்.
                                        அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க, மெல்ல கண் திறந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம் அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர், பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது. சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது "இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன், இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான். அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்" என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது. சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார். இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம். அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார். அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார். இந்த சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம். 
                                           சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம். அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம். சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது. ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்தபோது, ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய, அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள். சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? முடியாது? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம். அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் "அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள், அப்படியே விரட்டுவிடுங்கள்" என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர். ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அடுத்த நொடி அவர்கள் கண் திறந்தபோது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் "என்ன பண்றது, பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க, மனசைப் பாருங்கஎன்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.
  "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
 "நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
 வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
 - கடுவெளிச் சித்தர் -
                                               கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.
கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்
பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.
காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. காஞ்சிபுரத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் கடுவெளிச்சித்தரின் பாடல் ஒன்றையே நான் வியந்து நோக்குகிறேன். உலகையே சுத்தவெளியாக நோக்கி தனது தத்துவப்பாடல்களை யாத்ததினால் இவர் கடுவெளிச்சித்தர் என அழைக்கப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். மற்றும் சிலரே சோழநாட்டிலுள்ள கடுவெளி என்னும் ஊரத் தனது பிறப்பிடமாகக் கொண்டததினால் இவர் கடுவெளிச்சித்தர் எனறழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.
வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் வகையில் அமைந்த இவரது ஒரு பாடலைத் தழுவிய என் மழலை வரிகள்,
 பசுந்சோலைதனில் மலர்களினடுவே
மனமயங்கியிருந்த மதிகெட்ட
மனிதனவன் மனதிலொரு ஆசை கொண்டு
கட்டிலிலே மனையாளொடு குழாவியொரு
சிறு தொட்டிலை நிரப்ப
ஜயிரண்டு மாதமன்றோ
அவதிஇறாள் மங்கையவள்
முல்லையாய் மலர்ந்த
அம்மழலை முதிர்ந்ததும் ஜயகோ
மூளைகெட்ட மானிடனாய்
தாய்தந்தை தவமிருந்து
தாமடைந்த அப்பூவுடலை
மண்குடம் போட்டுடைப்பதைப் போலே
 மண்மீது வீணடித்தானே !
சக்தி
இத்தகிய அற்புத தத்துவ முத்துக்கள் விளைந்த உள்ளத்தில் ஊறிக்கிடந்த சமுதாய விழிப்புணர்ச்சி இவரது மற்றொரு பாடலில் தெரிகிறது.
நல்லவனைப் போலே நடிக்காதே - மனிதா
கள்வனின் வடிவாகாதே
தப்பான வழி உறவுகளை - மனிதா
தவறிக்கூட நீ இழைக்க எண்ணாதே
உன் சொந்தம் இல்லாப் பொருளை - மனிதா
உன் வசம் ஆக்க முனையாதே
 நண்பனைப் போல் உறவாடி - மனிதா
நயவஞ்சகமாய் பகை மூட்டாதே
ஆமாம் உலகில் மனிதனின் உள்ளம் அவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை அவன் அடையும் மார்க்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடுவெளிச் சித்தர் பகரும் பாடல் அறிவூட்டுகிறது. ஆக மொத்தம் சித்தர் என்போர் மனிதர்களின் சிருஸ்டிப்பா என்னும் கேள்வியை விடுத்து சித்தர்கள் கூறும் பொருள் மிக்க பாடல்களை ஒஉரிந்து கொள்வது மனதின் மென்மையை வளர்க்கும் என்பதே உண்மை.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்
 இரும்பை-605 010. ஆரோவில், விழுப்புரம் மாவட்டம். இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை  நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள். நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன்  மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே  நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர்  தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர். சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் "மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.
 மூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர்.  விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின்  தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார். தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள்,  சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, ""தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!'' என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார். தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய   லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து  முக்தி கொடுத்தார்.
 குயில்மொழி நாயகி: அம்மனின்திருநாமம் குயில்மொழி நாயகி.  இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற  கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு "குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள்  அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
கலா சந்திரன் : இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு "கலா சந்திரனாக' காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில்
  அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம்  விசேஷமானது.
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வரலாறு: கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.
 பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.
சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.
பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. திறக்கும் நேரம்: காலை 9 - 10 மணி, மாலை 5 - 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 - 1 மணி வரை.


No comments:

Post a Comment